‘சென்னைக்கேற்ற போட்டி!’
ஆனால், இன்றைய போட்டி சென்னை அணிக்கு ஏற்ற வகையில் அமைந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் கொல்கத்தா அணி பவர்ப்ளே முடிவில் 67 ரன்களை எடுத்திருந்து. குர்பாஸ் மட்டும்தான் அன்ஷூல் கம்போஜின் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.
இதனால் கொல்கத்தா அணி 200-220 ரன்களை நோக்கி செல்கிறதோ என தோன்றியது. ஆனால், 7-15 இந்த மிடில் ஓவர்களில் சென்னை அணி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. குறிப்பாக சென்னை அணியின் ஸ்ட்ரைக் பௌலரான நூர் அஹமது சுனில் நரைன், அங்ரிஸ் ரகுவன்ஷி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.