போட்டிக்கான அணியின் தயாரிப்பு குறித்து பேசியுள்ள இங்லே, “கோ-கோவுக்கான முதல் உலகக்கோப்பை இதுதான். நான் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாய் நியமிக்கப்பட்டுள்ளேன். அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி” என்றவர், “நாங்கள் ஒரு மாதமாக இரவும் பகலும் பயிற்சி செய்து உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வந்திருக்கிறோம். காலையில் உடற்பயிற்சி, மாலையில் மைதானத்தில் கோ கோ பயிற்சி என சவாலுக்கு தயாராக உள்ளோம்” என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்நிகழ்வில் உலகம் முழுவதுமிருந்து 20 ஆண்கள் அணியும் 19 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன. ஆண்கள் அணியில் இந்தியாவோடு நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் “A’ பிரிவில் உள்ளன. பெண்கள் அணியில் இந்தியாவோடு ஈரான், மலேசியா மற்றும் கொரியா குடியரசு ஆகியவை ‘A’ பிரிவில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறும்.