Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்… ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா | Kerala cricket team entered ranji trophy final for the first time

Share

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவும் மும்பையும் மோதின. மற்றொன்றில் குஜராத்தும் கேரளாவும் மோதின. இதில் முதல் நான்கு நாள்கள் முடிவில், விதர்பா vs மும்பை போட்டியில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும், மும்பை 270 ரன்களும் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் குவித்து மும்பைக்கு 406 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மறுபக்கம், குஜராத் vs கேரளா ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆக, குஜராத் அணி 400 ரன்களைத் தாண்டி களத்தில் நின்றது.

குஜராத் vs கேரளா

குஜராத் vs கேரளா

இந்த நிலையில், இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் இன்று கடைசி நாளை எட்டின. ரஞ்சி டிராபி விதிமுறைகளின்படி காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் டிரா ஆகிறதென்றால் முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலைப் பெற்றிருந்ததோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இன்று கேரளாவுக்கெதிரான அரையிறுதியில் குஜராத் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே, முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் எடுத்துவிட்டதால், குஜராத் தனது வெற்றியை உறுதி செய்ய 458 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com