ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சியை மேற்கொள்வற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை வர ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தவகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், முன்னாள் கேப்டன் தோனி, முகேஷ் சௌத்ரி, ராம கிருஷ்ணா கோஷ், குர்ஜப்னீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த், அன்ஷுல் கம்போஜ் போன்ற வீரர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்கள். தீவிர பயிற்சியை மேற்கொண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சிஎஸ்கே வீரர்கள் இருக்கின்றனர். சென்னையில் மட்டும் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன.