IND vs PAK: பும்ராவின் சர்ச்சைக்குரிய செய்கை; விக்கெட் மழை பொழிந்த குல்தீப்; ஹீரோவான திலக் வர்மா!

Share

20 – 3 சரியும் இந்திய அணி

147 என்ற இலக்கை எளிதானதாகவே எண்ணி களமிறங்கியது இந்திய அணி. வழக்கம் போல முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக ஆடப்போவதாக அறிவித்தார் அபிஷேக் சர்மா. ஆனால் பகீம் அஷ்ரப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹாரிஸ் ரவுஃப்பிடம் கேட்ச் அவுட் ஆனார்.

3வது ஓவர் வரை 5 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த கேப்டன் சூர்யகுமார் ஷாஹீன் அஃப்ரீடி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சல்மான் அலி அகா சிறப்பாக டைவ் அடித்து விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஃபீல்டிங்கை காட்டியிருக்கின்றனர்.

10 ரன்களுக்கு மேல் அடித்திருந்த ஒரே பேட்ஸ்மேனான சுப்மன் கில், அபிஷேக் சர்மா வழியில் 12 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். சஞ்சு சாம்சன் – திலக் வர்மா கூட்டணி இந்தியாவின் நம்பிக்கையை உயர்த்திப் பிடித்திருக்கின்றனர். சிறப்பான இரண்டு பவுண்டரிகள் மற்றும் திலக் வர்மாவின் சிக்ஸுக்குப் பிறகு 6 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

சீராக பவுண்டரிகளும் சிக்சர்களும் அடித்த வர்மா – சம்சன் கூட்டணி 12 ஓவர் முடிவில் 76 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் நேர்த்தியாக வலைவிரித்து ஸ்டம்புக்கு வெளியேபோட்ட பந்தில் சஞ்சு என்ற ஆபத்தான மீனைப் பிடித்தார். பாகிஸ்தானின் அழுத்தம் குறைந்தது.

சிவம் துபே – திலக் வர்மா கூட்டணி நிதனமாக ஆட்டத்தை எடுத்துச் செல்லத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃபை குறிவைத்து ரன்களைக் குவித்தார் திலக் வர்மா. 41 பந்துகளுக்கு 50-ஐ அடைந்தார். 4 விக்கெட் வீழ்ந்த சூழலில் உறுதியாக விளையாடிய அவருக்காக ஆர்பரித்தது அரங்கம்.

சிங்கில்களிலும் இரண்டுகளிலும் ரன்களைன் சிறுகசிறுக சேர்த்தது திலக் – துபே கூட்டணி. அவ்வப்போது சிக்சர் அடிக்கவும் தவறவில்லை. 19வது ஓவர் தொடக்கத்தில் சுமார் 6 நிமிடம் காலில் சிகிச்சைப் பெறுவதற்காக இடைவெளி எடுத்தார் ஹாரிஸ் ரவூஃப். இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்த துபே அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

6 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் திலக் வர்மா. அடுத்த பந்திலேயே சிக்சர் விளாசி பாகிஸ்தான் ரசிகர்களை தலைமேல் துண்டுபோட வைத்தார். இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய ரின்கு சிங்குக்கு ஃபைனலை முடித்துவைக்கும் வாய்ப்பு கிடைக்க, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உரித்தாக்கினார்.

4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்து இன்றைய நாளின் ஹீரோவானார் திலக் வர்மா!

இரண்டு இன்னிங்ஸையும் சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான், சீராக ஆட்டத்தை எடுத்துச்செல்லத் தவறியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்காக காத்திருந்த பாகிஸ்தான் போட்டியை திலக் வர்மா ரகசியமாக திருடியதை கவனிக்கவில்லை.

வரவிருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதை அறிவித்து கோப்பையைத் தொடுகிறது இந்திய அணி!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com