இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஹார்டிக் பாண்டியாவாக தனி ஒருவனுக்காக விளையாடவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.

இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நாம் எவ்வளவு விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நமது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே முக்கியம். பும்ரா போன்று என்னால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியாது.