கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தோல்வி குறித்து பேசுயிருக்கிறார்.
“நான் நன்றாக இருக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அந்தத் தோல்வி இன்னும் வலிக்கிறது.
ஏழு வாரங்கள் நீடித்த ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாடினோம்.