பல்வேறு கனவுகளுடன் உருவான இந்திய மகளிர் அணி, முதல்முறையாக 2016-ல் IIHF மகளிருக்கான ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடரில் பங்கேற்றது.
சிங்கப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 8 – 1 எனத் தோல்வியைச் சந்தித்தது இந்திய மகளிர் படை.
மேலும் இந்தத் தொடரில், சைனீஸ் தைபே, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.
அதிலும், சைனீஸ் தைபே அணிக்கெதிரான போட்டியில் 13 – 0 எனப் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.
அந்த சமயத்தில் சர்வதேச அரங்கில் ஒரு அணியின் மோசமான தோல்வியாக இது பதிவாகியிருந்தது.

சர்வதேச அளவில் தான் பங்கேற்ற முதல் தொடரில் ஒரு புள்ளிகூட பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவுசெய்தது.
இருப்பினும், மனம் தளராத நம் வீராங்கனைகள் 2017-ல் நடைபெற்ற IIHF ஆசியா சேலஞ்ச் கப் தொடரில், பிலிப்பைன்ஸ் அணியை 3 – 4 என வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தனர்.
ஆனால், அதே தொடரில் தாய்லாந்திடம் 20 – 1 என மோசமான தோல்வியையும் பதிவுசெய்தனர்.
தொடரின் முடிவில், மொத்தமாக இரண்டு வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் இந்திய அணி நான்காம் இடம் பிடித்தது.