இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருது பெற்றதுடன், தொடர் முழுக்க மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்ததால் தொடர்நாயகி விருதும் வென்றார் ஆல்ரவுண்டர் கொங்காடி த்ரிஷா.
தன்னுடைய இரண்டு வயதில் தந்தை வாங்கித் தந்த நெகிழி கிரிக்கெட் பேட்டில் தனது கரியரைத் தொடங்கிய கொங்காடி த்ரிஷா, இந்த வெற்றியின் மூலம் தன் தந்தைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மகளின் இத்தகைய வெற்றி குறித்து பேசிய கொங்காடி த்ரிஷாவின் தந்தை, “எனது மகளுக்கு இரண்டு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். அன்றிலிருந்தே அவருக்குப் பயிற்சியளித்து வருகிறேன். த்ரிஷாவிற்கு நான்கு வயதாக இருந்தபோது, ஜிம்மிற்கு அவளை அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது வேலையை விட்டு, த்ரிஷாவிற்கு கிரிக்கெட் ஆடுகளம் உருவாக்கி பயிற்சி கொடுத்தேன்.” என்று நெகிழ்ந்தார்.