அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா?
ரிஷப் பண்ட் ரன் அவுட் பற்றி பேசியபோது, “முதல் இன்னிங்ஸில் லீட் வைக்க வேண்டியது எங்களுக்கு முக்கியமனதாக இருந்தது” என்றார்.
நான்காவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது குறித்து, “நிலைமை படபடவென மாறின. கடைசி ஒருமணி நேரத்தில் இன்னும் நன்றாக முயற்சித்திருந்திருக்கலாம். இன்று காலை அவர்கள் சரியான திட்டங்களுடன் வந்திருக்கின்றனர். இந்த ஸ்கோர் எங்கள் விளையாட்டை பிரதிபலிப்பதாக இல்லை” என்றார்.
ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, “சீக்கிரமே உங்களுக்குத் தெரியவரும்” என பதிலளித்தார்.