இதில் கில்லின் நிலைப்பாடு என்ன?
அதேசமயம் பிசிசிஐ-யின் இத்தகைய முடிவுக்கு அவர்களை மட்டுமே கேள்விக்குட்படுத்த முடியாது. காலம் காலமாக இந்திய அணியில் எத்தனை பேர் சிறப்பாக விளையாடினாலும் தனிமனித துதிபாடல் என்பது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது.
சச்சின், தோனி, கோலி, ரோஹித் என ரசிகர்கள் இன்றும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை இப்போதும் பார்க்கிறோம்.
ஆனால், குழு விளையாட்டில் தனிமனித துதிபாடல் முற்றிலுமாக புறக்கணிப்படவேண்டியதுதான். ரோஹித்துக்குத் பிறகு அப்படி யாரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ரசிகர்கள் நகரவில்லை.

இவ்வாறு ஒரு நல்ல டிராக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் நகரும்போது, பி.சி.சி.ஐ தாமாக முன்வந்து அனைத்திலும் கில்லை முன்னிலைப்படுத்தி தனிமனித துதிபாடலுக்கு அடித்தளமிடுவதாக இருக்கிறது அவர்களின் நடவடிக்கை.
ஏனெனில், மூன்று ஃபார்மெட்டுக்கு மூன்று கேப்டன்கள் இருந்தால், பயிற்சியாளர்கள் மூன்று வெவ்வேறு கேப்டன்களிடம் கேம் பிளான் போடுவது கடினம் என்று கூறும் அஜித் அகர்காருக்கு, மூன்று ஃபார்மெட்டிலும் ஆடுபவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே இருக்கும்போது மற்ற வீரர்களிடம் அந்த கேம் பிளானை செயல்படுத்துவது ஆல் ஃபார்மெட் ஒன் கேப்டனுக்கு சிரமமாக இருக்கும் என்று தெரியாதா?
இந்த இடத்தில்தான், வொர்க் லோட் வந்தாலும் பரவாயில்லை சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் இந்தத் தலைமுறையில் இந்திய அணியின் முகமாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கில்லுக்கு வந்துவிட்டதோ என்ற கோணத்திலும் கேள்வி எழுகிறது.
சஞ்சு, கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் என ஏற்கெனவே கேப்டன்சியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும்போது கேப்டன் பதவிக்கு கில்லை விட்டால் வேறு ஆள் இல்லை என்று பி.சி.சி.ஐ முடிவெடுப்பதும், அதை அப்படியே அவர்கள் கொடுக்கிறார்கள் நான் ஏற்றுக்கொண்டேன் என கில் ஏற்றுக்கொள்வதும், செயற்கையாக இந்திய கிரிக்கெட்டின் இளவரசனை உருவாக்குகிறார்களா என பலரை முணுமுணுக்க வைக்கிறது.
எதுவாக இருந்தாலும் வீரர்களின் வேலை விளையாடுவது மட்டும்தான், அவர்களுக்கு இளவரசன், அரசன் போன்ற தற்காலிக மகுடங்களை ரசிகர்கள் மட்டும் கொடுப்பார்கள் என்பதை கடந்தகால வரலாறுகள் உணர்த்தும்!
கில் கேப்டனானது குறித்தும், இந்திய அணியின் கேப்டன்சி விவகாரத்தில் பி.சி.சி.ஐ-யின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.