உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால் போதும் என்பதில் பெரிதாக நம்பிக்கையில்லை.
ஏனெனில், சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனாக இருக்க நீங்கள் தகுதியற்றவர்கள் ஆவீர்கள்” என்று கூறினார்.
மேலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ஆகாஷ் சோப்ரா கேட்டதற்குப் பதிலளித்த கம்பீர், “எனது கோச்சிங் கரியரில் அதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. எனது வீரர்களிடமும் கூறியிருக்கிறேன்.
எதிர்காலத்தை நோக்கிச் செல்வது முக்கியம்தான். அதேசமயம் சில நேரங்களில் கடந்த காலத்தையும் திரும்பிப் பார்ப்பது முக்கியம்.
ஏனெனில் கடந்த காலத்தை நீங்கள் மறந்துவிட்டால், எல்லாவற்றையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள்” என்று தெரிவித்தார்.