தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய வைஷாலி, இன்று தனது கடைசி சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியுடன் இன்று மோதினார்.
தனது இறுதிச்சுற்றை டிராவில் முடித்த வைஷாலி, மொத்தமாக 11 சுற்றுகளில் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம், FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் வைஷாலி.
மேலும், இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு மூன்றாவது இந்தியராக வைஷாலி நேரடி தகுதிபெற்றிருக்கிறார்.