சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் களமிறங்கின. அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக நெருக்கடி இரண்டு அணிகளுக்கும் உண்டானது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஒப்பனராக இறங்கிய இப்ராஹிம் சத்ரான், 50-வது ஓவரின் முதல் பந்துவரை களத்தில் நின்று தனியாளாக 177 ரன்கள் குவித்தார். கூடவே, ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா 40 ரன்கள் அடித்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.