இங்கிலாந்து மறந்து விட்டது
அங்கே இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே போட்டி முடியும், இல்லையென்றால் எதிரணி முடிவை ஏற்க வேண்டும் என்பதை இங்கிலாந்து மறந்து விட்டது போல் தெரிகிறது. சொல்லப்போனால் 80களில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களிடம் சதத்தை அடிக்க எங்களுடைய பேட்ஸ்மேன்களை பவுலிங் போட சொல்லட்டுமா? என இங்கிலாந்தினர் கிண்டல் செய்தனர்.
அப்படி கிண்டலடித்த அவர்கள் இங்கிலாந்தின் முன்னணி பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் 4 மணிநேரம் எதிர்கொண்டு 80 ரன்களை தொட்டனர் என்பதை மறந்து விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை அடிப்பது ஒவ்வொரு போட்டியிலும் நடக்காது.

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் அதை தொடுவதற்கு தகுதியானவர்கள். ஒருவேளை நான் கேப்டனாக இருந்திருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களிடம் எஞ்சிய ஓவர்கள் முழுவதும் விளையாடி இங்கிலாந்து வீரர்களை இன்னும் சோர்வடைய வையுங்கள் என்று தெரிவித்திருப்பேன். குறிப்பாக அவர்களுடைய ட்ராவை ஏற்றுக்கொள்ளாத போது செய்த கிண்டல்களுக்காக அதை செய்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.