Electric bike ev battery explode in telangana one person died 3 injured – சார்ஜ் போடும்போது எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து

Share

தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்தபோது, திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருவது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். வாங்கும்போது விலை அதிகம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பேட்டரி வாகனங்கள் பலன் அளிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பேட்டரி வாகனங்கள் விபத்தை சந்திக்கும் செய்திகள் நாடு முழுவதும் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் வீட்டில் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரியை சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க – ஆளுநர் மூலம் விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பாஜக சதித்திட்டம்: திருமாவளவன்

இங்கு எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை கழற்றி வீட்டில் வைத்து இரவு நேரத்தில் சார்ஜ் செய்துள்ளனர். திடீரென வெடித்ததில் வீட்டில் இருந்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க – மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

இதுதொடர்பாக முதியவரின் மகன் அளித்த புகாரின்பேரில், கவனக்குறைவால் விபத்தை ஏற்படுத்துதல் 304 ஏ, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட பைக் ப்யூர் ஈவி PURE EV என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஆகும். விபத்தை தொடர்ந்து சுமார் 2 ஆயிரம் பைக்குகளை திரும்பப் பெற முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பை ப்யூர் ஈவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ப்யூர் ஈவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com