உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடலியக்கம் இல்லாத வாழ்க்கைமுறை போன்றவை, கண்களில் ஸ்ட்ரோக் வருவதற்கான ரிஸ்க் காரணிகள்.
ரெட்டினா எனப்படும் விழித்திரையில் இருந்து தகவல்கள் புராசெஸ் செய்யப்பட்டு, பார்வை நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் வழியே மூளைக்கு அனுப்பப்படும்.
மூளையில் உள்ள ‘ஆக்ஸிபிட்டல் கார்டெக்ஸ்’ (occipital cortex) என்ற இடத்துக்குப் போய்தான் தகவல்கள் புராசெஸ் செய்யப்படும்.

ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடை ஏற்படும்போது அதற்கேற்ப, பார்வை மங்குதல், தசைகள் முடங்கிப்போவது, பார்வை இரண்டிரண்டாகத் தெரிவது, ஏதேனும் மிதப்பது போல உணர்வது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது இதயநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.