‘ஹஸ்ஸி நம்பிக்கை!’
ஹஸ்ஸி பேசியதாவது, “எங்கள் மூத்த வீரர்களிடம் இன்னும் நல்ல கிரிக்கெட் ஆடும் திறன் இருக்கிறது என நம்புகிறோம்.
ரஹானே, வாட்சன் எனப் பலரும் அப்படி சென்னைக்குச் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். இனி தொடரில் அடுத்த கட்டத்திற்கு [பிளேஆஃப்] செல்ல முடியாது என்ற நிலையில் அணிகள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். அந்த இடத்திற்கு இன்னும் நாங்கள் செல்லவில்லை என நினைக்கிறேன்.
நாங்கள் பிளேஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது என இன்னும் வெள்ளைக் கொடியைக் காட்டி விடவில்லை.
நிச்சயமாக இந்த தோல்வி எங்களை ரொம்பவே காயப்படுத்துகிறது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியின் உதவியாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் இது நிச்சயம் காயப்படுத்தும்.