பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் – விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்
டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது. வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டின் பூட்டு முறைப்படி திறக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.…









