விலங்குகள் தங்கள் குட்டிகளை உண்ணக் காரணம் என்ன?
விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், “தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறியிருக்கிறார்.அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன.…









