ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களை கண்காணிக்கும் தாலிபன்கள் – எதற்காக?
படக்குறிப்பு, காபூல் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான கேமராக்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், மஹ்ஜூபா நவ்ரூசிபதவி, பிபிசி ஆப்கன் சேவை28 பிப்ரவரி 2025, 01:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைகளால் சூழப்பட்ட, அதிக நபர்கள் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு மையம் அது. அங்கு தாலிபனின் காவல்துறை, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பைப் பெருமையுடன் பிபிசியிடம் காட்டியது. லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்காணிக்க இந்த அமைப்பு…








