CSK; Dhoni; Dewald Brevis; “ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே…” – தோனி குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரெவிஸ், ஷேக் ரஷீத், அன்ஷுல் ஜம்போஜ் ஆகிய இளம் வீரர்கள் சென்னை அணியின் நம்பிக்கைகளாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.டெவால்ட் ப்ரெவிஸ்இந்த நிலையில், 2022 முதல் 3 சீசன்களாக மும்பை அணியில் ஆடி, நடப்பு சீசனுக்கு முன்பாக மெகா ஏலத்தில் அன்சோல்ட் ஆகி, பின்னர்…

காஞ்சிபுரம் வாத்துப் பண்ணையில் 9 வயது ஆந்திர சிறுவனுக்கு என்ன நடந்தது?

படக்குறிப்பு, ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்29 மே 2025புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்”என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது” எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான…

ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி? | How RCB easily defeated Punjab kings in IPL qualifier 1

முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி. ஐபிஎல் தொடரில் முலான்​பூரில் நேற்று நடை​பெற்ற பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில்…

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

எந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள்.செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.பழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.…

RCB: `இன்னும் ஒரு மேட்ச்தான்…கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!' – ரசிகர்களுக்கு ரஜத் பட்டிதர் மெசேஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது.RCBஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். RCB: `விண்வெளி நாயகா!’- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCBஅவர் பேசியதாவது, “நாங்கள் எங்களின் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். எப்படி பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக…

பிரேசிலில் ஒரு கிராமத்தையே பாதித்த அரிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souzaபடக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.கட்டுரை தகவல்எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ்பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து 29 மே 2025, 11:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா…

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய ஆர்சிபி! | PBKS vs RCB Live Score, IPL 2025 Qualifier 1: Royal Challengers Bengaluru beats Punjab Kings

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது…

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!’ – சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. இது, ஏற்கனவே கடந்த 2024-ம் வருட தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-விற்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக, நாங்கள் பதட்டமோ பயமோ…

RCB: `விண்வெளி நாயகா!'- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCB

‘நல்ல நிலையில் ஆர்சிபி!’ஐ.பி.எல் ப்ளே ஆப்ஸூக்குள் நுழைந்து நிற்கிறது ஆர்சிபி. இன்று பஞ்சாபுக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் ஆடவிருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பெங்களூருவுக்கு நீண்ட நாள் கனவு. இதுவரை அது சாத்தியப்படவே இல்லை. இந்த முறை ஆர்சிபிக்கு சாதகமாக எல்லாமே கூடி வருவதுபோல இருக்கிறது.விராட் கோலிநல்ல அணி, தலைமையேற்ற மாத்திரத்திலேயே பக்குவத்தோடு வழிநடத்தும் கேப்டன், மேட்ச் வின்னர்கள் என அந்த அணி முழுக்க நேர்மறையான அம்சங்களால் நிரம்பியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் விராட்…

அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் பாமக-வை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், X/GK Maniபடக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)29 மே 2025, 08:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது.சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ்…