கோவை அருகே வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட எந்த வகையான காட்டுயிர் மற்றும் பறவைகளையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான வசதிகள் இருப்பதாக வனத்துறையினர் உறுதியளிக்கின்றனர்.கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தாமல் இதற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும்…