“என் மகன் அல்ல, நானே வேட்பாளர்’’ – ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்! | change in dmk candidate for ranipet constituency – minister gandhi exclusive

ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி. `ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’…

SRH vs LSG – லக்னோ எப்படி வென்றது? |SRH vs DC – How did Delhi Capitals win?

சீக்கிரமாகப் போட்டியை முடிப்போம் என்ற நோக்கில் ஆடிய மார்க்ரம், ஷிவாங் சர்மா வீசிய பந்தில் அவுட் ஆனார்.​அடுத்து வந்த பதோனியும் 12 ரன்களுக்கு அவுட் ஆக, பூரான் மட்டும் கொஞ்சம் மாறுதலாக, எல்லாரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது இவர் மட்டும் கிரீஸில் கபடி விளையாடியதால் ஸ்டம்பிங் மூலம் இஷான் கிஷனால் அவுட் ஆக்கப்பட்டார். “விக்கெட் விடாமல் ஆடினாலே வெற்றி நிச்சயம்” என்ற நிலையில் இருந்த போட்டியை, “ஒரு விக்கெட் விட்டால் அவ்வளவுதான்” என்ற நிலைக்கு மாற்றிய பெருமை லக்னோ…

இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவில் குடிநீர் கிடைப்பது ஒரு சவாலாகவே உள்ளது, இது, மக்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிக்கக் காரணமாக அமைகிறது.37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் பெரும்…

“அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாகவே இருக்கிறது”- பயிற்சியாளர் பிளெமிங்| CSK Coach Stephen Fleming about sanju samson

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், முதல் இரண்டு போட்டிகளிலும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.சஞ்சு சாம்சன் 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது “தொடர் நாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக விளையாடிய முதல்…

அதிருப்தி திமுக, திணறும் தேமுதிக; உற்சாக அதிமுக – குடியாத்தம் தொகுதி களம் எப்படி?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனித்தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக பரிதா புருஷோத்தமன் களமிறங்கியுள்ளார். இவர், அ.தி.மு.க-வில் பேரணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதும், அ.தி.மு.க சார்பாக பரிதா புருஷோத்தமன் போட்டியிட்டார். அப்போது, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பு தவறியது. இந்த முறை குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், தெம்போடு களம் காண்கிறார் பரிதா புருஷோத்தமன். பரிதா புருஷோத்தமன்பேரணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர், பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பான…

” கடந்த சீசன் எனக்கு சவாலானதாக இருந்தது. ஆனால்.!”- ரவி பிஷ்னோய் |player of the match Ravi Bishnoi post match speech

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். விருது வென்ற பிறகு பேசிய ரவி பிஷ்னோய், ” கடந்த சீசன் எனக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், என்னுடைய திறனின் மீது நம்பிக்கை வைத்தேன். சரியான லெந்தில் வீசத் தவறினால் என்னுடைய பந்தை சிக்சர் அடித்து விடுகிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அதுதான் என்னுடைய…

செல்வசுஹாசினி: செல்லப்பிராணி நாய் தனது நகத்தால் கீறியதால் 2 மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி – என்ன நடந்தது?

படக்குறிப்பு, ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினிகட்டுரை தகவல்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல்…

‘CSK vs PBKS தோல்வி குறித்து ருத்துராஜ் பேசியவை |CSK vs PBKS: Ruturaj Gaikwad Opens Up on Chennai Super Kings’ Defeat”

நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினோம். பவர்ப்ளே முடிந்த பிறகு, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோடியாகச் செயல்படுவது எங்களுக்கு உதவும் என்று நினைத்தோம். ஆனால், இருவருக்குமே இது ஒரு கடினமான நாளாக அமைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியாகச் செயல்படாததுதான் எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.பந்துவீச்சில் எங்களால் அழுத்தத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் தேவைப்படும் ரன் ரேட் உயராமல் பார்த்துக் கொண்டனர். வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் 11-ல் இருந்து…

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்; மீனவ மக்கள் சந்திப்பு; ஸ்டாலின் தேர்தல் பரப்புரை | Photo Album

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்.! மீனவ மக்கள் சந்திப்பு.! முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.!நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! – என்ன காரணம்? Source link

DC vs MI: போட்டியை வென்று கொடுத்த சமீர் ரிஸ்வி; கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ்; எப்படி தோற்றது?

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற மும்பை vs டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்க, மாற்றாக மும்பையை வழிநடத்தும் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது.DC vs MIடாஸ் வென்ற அக்சர் பட்டேல் தயக்கமின்றி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்தத் தொடரில் டாஸில் வென்று பௌலிங் தேர்வு செய்தாலே வெற்றி உறுதி என எழுதப்படாத விதி உருவாகி…

1 2 3 1,466