குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும்…









