சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை – News18 Tamil

உலக நாடுகள் கொண்டாடும் சதுரங்கத்தின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த உலகின் மிகச் சிறந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் ஒருங்கே சங்கமிக்கும் இந்த மௌன யுத்தம் ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த இந்த தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை தொடரும்…

ரூட்டு தல தாக்குதல் விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுத தடை சட்டம் உட்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் ஆயுத தடை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், நேற்று காலை அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்…

அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர். சென்னையில் உள்ள தமிழக பாஜ மாநில அலுவலகத்தில் அதன் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாமக மாநில துணை தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தவாக நிறுவனர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் பிரவீன்குமார், உள்பட பலர் நேற்று பாஜவில் இணைந்தனர். Source link

சருமத்தை பாதுகாப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் வெளிச்சமும் வெப்பமும் அதிகமாக இருப்பதால் பிரத்யேகமான சில சரும பிரச்னைகள் ஏற்படும். நம் உடலின் வெப்ப நிலையை சரியான … Source link

`ஆரம்பிக்கலாங்களா’ மோடில் மக்கள்; உயரும் அசைவ உணவு உண்பவர்கள் எண்ணிக்கை; NFHS ஆய்வு சொல்வது என்ன?| nfhs study says The number of non-vegetarians eaters has increased

சைவ – அசைவ உணவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், முன்பில்லாத அளவுக்கு தற்போது அசைவ உணவு உண்ணும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் (NFHS) தெரிவிக்கின்றன. 2019 – 2021-ல் வெளியான தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், 15 – 49 வயதிலுள்ள 83.4 சதவிகித ஆண்களும் 70.6 சதவிகித பெண்களும் தினசரியோ, வாரத்தில் சில நாள்களோ அல்லது எப்போதாவதோ அசைவ உணவுகளைச் சாப்பிடு…

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation |Colby Stevensen’s inspirational story from being in Coma to winning Olympic Silver medal

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். Source link

நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு…

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து; நோயாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா? | will the new medicine of breast cancer help patients in battling the disease

“மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை PHESGO மருந்து மேம்படுத்தும். சிகிச்சைக்கான நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு வசதியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும். நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் குறைவான நேரத்தைச் செலவிட்டாலே போதும்” என்று ரோச் பார்மா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வி சிம்ப்சன் இம்மானுவேல் கூறியுள்ளார்.இந்த மருந்தின் வரவானது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மருந்தைப்…

பூவெல்லாம் சமைத்துப்பார்! – செம்பருத்தி புளிக்குழம்பு

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி