குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடுகின்றனவா நிறுவனங்கள்?
புதிதாக ஒரு நோய் பரவும்போது, மக்கள் அச்சத்தில் தூக்கம் தொலைக்கிறார்கள். ஆனால், நாடுகள் அதைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் பெயரைக் கெடுக்கப் பார்க்கின்றன. மருந்து நிறுவனங்கள் உற்சாகத்துடன் வியாபாரக் களத்தில் குதிக்கின்றன. தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் அபகரிக்கின்றன. கொரோனா தொற்று பல மருந்து நிறுவன அதிபர்களை உலகின் மகா கோடீஸ்வரர்களாக மாற்றிய செய்தியை சமீபத்தில்தான் படித்தோம். குரங்கு அம்மை அதை `ரிப்பீட்டு’ செய்கிறது.30-க்கும் மேற்பட்ட நாடுகளில் திடீரெனப் பரவி நூற்றுக்கணக்கானவர்களைத் தொற்றிய குரங்கு அம்மை இன்று உலகை…









