ஒடிசா: ஆற்றில் விழுந்த டேங்கர் லாரி வெடித்து விபத்து… 4 பேர் உடல் கருகி பலி | 4 charred to death, 1 critical as oil tanker explodes in Odisha
ஒடிசா-வின் பரதீப்பில் இருந்து சம்பல்பூருக்கு எரிபொருள் டேங்கர் லாரி சென்றுள்ளது. இந்த லாரியை நயக்கர் பகுதியை சேர்ந்த பங்கஜ் நயாஜ் ஓட்டிவந்துள்ளார். இவருக்கு உதவியாளராக திபு கதுவா என்பவரும் சென்றுள்ளார். இந்த நிலையில் எரிபொருள் நிரம்பிய லாரி அதிகாலை 1:45 மணியளவில் குசுமி ஆற்றின் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, குசுமி ஆற்றில் விழுந்துள்ளது. சத்தம் கேட்டு உள்ளூர் வாசிகள் ஓட்டுநரையும் அவரின் உதவியாளரையும்…









