ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர மோதல் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பு: கல்வீச்சு, கத்திக்குத்து, வாகனங்கள் உடைப்பால் பரபரப்பு; 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு, தலைமை அலுவலக சாலையே போர்க்களமானது
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் சென்னை ராயப்பேட்டை பகுதியே போர்களமானது. இருதரப்பும் கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதி கொண்டனர். இதில் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். இதனால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் அதிகரித்தது. இதை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை வெளியேற்றி, அதிமுக…








