Browsing: அரசியல்

இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கைது…

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிராமண பத்திரம் பெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கையெழுத்து பெறப்படுகிறது. Source link

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 25ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னைகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

சொல்லிட்டாங்க…

மேயர்கள் அடிமட்ட அளவில் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து செயல்படக் கூடாது.- பிரதமர் மோடிகார் இல்லாத எத்தனையோ லட்சக்கணக்கான பேர் நம்நாட்டில் உள்ளனர். நடந்து சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவர்னர் பதவி என்பது ஒரு அரசியலமைப்பு பதவியாகும். அதில் இருந்து கொண்டு மதிப்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்ஒன்றிய அரசு மாநில அரசின் அதிகாரத்தை…

மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்த்திலுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்தியப் பொறியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல்…

மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல்கள் முடிவுற்றதை தொடர்ந்து, நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில், மாவட்டக் கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாவட்டக் கழகத்திற்கென ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர்(கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ்…

நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காய்ச்சலால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 நாளில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சுகாதாரத் துறை ஆறுதல் கூறுவது போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள்…

வேலை வாங்கி தருவதாக மியான்மருக்கு கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மாருக்கு கடத்தப்பட்ட தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று முத்தசரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட்டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்தரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ளவர்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவர்களின் குடும்பங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி…

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடியானது

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில்  ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு…

அதிமுக தலைமை அலுவலகம் சேதம் முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் சிபிசிஐடி இன்று தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள்…

1 91 92 93 94 95 161