தலைக்குக் குளிக்கும் நாள்களில் சாம்பிராணி புகை போடுவது சரியானதா?| Is it right to use incense smoke after having oil bath?
ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருள்களும், புகையைக் கிளப்புகிற வஸ்துகளும் வாயுப் பொருள்கள், கரிமச் சேர்மங்களை உள்ளடக்கியவையாக இருக்கும். அவை வெளியிடும் மாசு மற்றும் புகையானது சுவாசப்பாதை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவை வெளியிடும் மாசை உள்ளிழுக்கும்போது சுவாசப்பாதை செயலிழப்புகூட ஏற்படலாம். ஊதுவத்தியின் புகையானது ரத்தத்தில் IgE அளவுகளை அதிகரித்து, அதன் விளைவாக சரும அலர்ஜிகூட ஏற்படலாம். மற்றபடி இதுபோன்ற அலர்ஜி அல்லது சுவாசப்பாதை பிரச்னைகள் இல்லாதவர்கள் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். அவர்களுமே சாம்பிராணி புகை போடும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்துவைக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் காற்று மாசு நீர்த்துப்போய், புகை ஏற்படுத்தும்…








