Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தொலைந்துபோன உறக்கம்… சரிசெய்ய  வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: எனக்கு 48 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக எனக்கு இரவுத் தூக்கம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாதி உறக்கத்தில் விழித்துக்கொள்கிறேன். அதன்பிறகு தூங்க முடிவதில்லை. இதை சரிசெய்ய ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப் பழக்கம்தான் காரணமா? இந்தப் பிரச்னையை ‘இன்சோம்னியா’ (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா? I Is it advisable to colour the hair during pregnancy?

குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில்,  கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.கெமிக்கல் ஹேர் டைfreepikஅதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபுள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும்…

“எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பே வரலை'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 134

காதல், எதிர்பாலினம் மீது வருவதுபோலவே தன்பாலினம் மீதும் வரும் என்பதை சமூகம் சமீபத்தில்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்… இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் இந்தக் கட்டுரையில் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த இளைஞர் இருபதுகளின் இறுதியில் இருந்தார். பார்ப்பதற்கு எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அழகான தோற்றத்துடன் இருந்தார். வசதி படைத்தவர் என்பதும் சொல்லாமலே தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, தன்னுடைய பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.…

Doctor Vikatan: கருத்தரித்தலை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டிகள்?

Doctor Vikatan: என் வயது 31. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் கருத்தரிப்பது பாதிக்கப்படுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.Doctor Vikatan: வேளை தவறி மருந்துகள் எடுத்தால் அவை வேலை செய்யாதா?ஃபைப்ராய்ட்ஸ் (Fibroids) என்பவை கர்ப்பப்பையில் உள்ள புற்றுநோய்…

Happy Teeth: ‘ரூட் கேனல்’ சிகிச்சை யாருக்கெல்லாம் தேவை? | Who is at risk for root canal treatment?

யாருக்கெல்லாம் ரூட் கனால் சிகிச்சை தேவைப்படலாம்?* தீராத வலி: பற்களில் அசௌகர்யத்தை உணர்தல், தீராத பல் வலி, தாடை, முகம், பிற பற்களிலும் வலி இருந்தால் * பல் கூச்சம்: சூடாக அல்லது குளிர்ச்சியாக எதையாவது குடித்தால் அல்லது சூடாகக் குடித்தாலும் குளிர்ச்சியாகக் குடித்தாலும் பற்களில் கூச்சம் ஏற்பட்டால், அந்த அசௌகர்யம் சில விநாடிகளுக்கு மேல் நீடித்தால் Root Canal சிகிச்சை* ஈறுகள், தாடைப் பகுதியில் வீக்கம்: பல்லில் நோய்த்தொற்று ஏற்பட்டு, சுற்றுப்பகுதியில் சீழ் கோத்திருப்பதால் ஈறுகளில்,…

Doctor Viktan: காதுக்குள் அலை அடிப்பது போன்ற சத்தம்; தலைக்குக் குளித்தால் பிரச்னை… தீர்வு உண்டா?

Doctor Viktan: காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்குத் தீர்வு சொல்ல முடியுமா… டாக்டரிடமும் காட்டிவிட்டேன். காது சுத்தமாக இருக்கிறது என்கிறார் . தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளிக்கும்போது இந்த மாதிரி ஏற்படுகிறது. இதற்கு வேறு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதில் அலை ஓசை போல சத்தம் கேட்பதற்கு காதில் குருமி அடைத்தல், சளி அல்லது தொண்டை…

Doctor Vikatan: வேளை தவறி மருந்துகள் எடுத்தால் அவை வேலை செய்யாதா? |Will the medicines not work if taken at the wrong time?

சில மருந்துகளை வெறும்வயிற்றில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் அவை வயிறு மற்றும் குடல் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன்படி பார்த்தால் வலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை போன்றவற்றை சாப்பாட்டுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்துவோம்.ஆன்டிபயாடிக், வயிற்றுப்புண்களைத் தடுக்கும் மருந்துகள் சிலவற்றை சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.  எப்போதாவது ஒருமுறை சாப்பாட்டுக்கு முன் எடுக்க வேண்டிய மருந்தை மறந்துவிட்டு, சாப்பாட்டுக்குப் பின் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. சாப்பாடு சாப்பிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் மருந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான் தவறு. ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளாமல்,எந்தெந்த மாத்திரைகளை எப்போது எடுக்க வேண்டும்…

Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப்பழக்கம்தான் காரணமா? | Can a millet based diet cause sudden weight loss?

அதுவே எடை குறையத் தேவையில்லை என்போர், உணவு இடைவேளைகளில் பழங்கள், ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், நட்ஸ், சீட்ஸ்  போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் இதைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். என்றோ ஒருநாள் கல்யாணம், விருந்து, விசேஷங்களில் அதிகம் சாப்பிடுவதில் தவறில்லை. அதை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொள்ளாமல், பேலன்ஸ்டு உணவாகச் சாப்பிட வேண்டும். பாரம்பர்ய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக, ஆக்டிவ்வாக இருக்கும்.…

Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரந்தோறும் ஜலதோஷம்… நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி?

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது. வாரம் ஒருமுறை அவனுக்கு சளி பிடித்துக்கொள்கிறது. நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது புரிகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு…. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி டாக்டர் குமாரசாமிகொரோனா காலத்துக்குப் பிறகுதான் மக்கள் நோய் எதிர்ப்பாற்றல் என்ற விஷயம் குறித்துப் பேசவும், அது குறித்து கவலைப்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.உங்கள் மகனுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னையின் பின்னணியில் நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைபாடு தொடர்பான பாதிப்புகள்…

போக்சோ விசாரணை: “நாய் கூண்டு போல விட்னஸ் பாக்ஸ் உள்ளது…” கேரள உயர் நீதிமன்றம்! | witness box for POCSO case victims worse than kennels

போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை ஜனவரி 8 திங்கள்கிழமையன்று பரிசீலித்த நீதிபதி சோபி தாமஸ், விட்னஸ் பாக்ஸ் குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கூறுகையில், “போக்ஸோ நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்ல இடம் உள்ளது. குழந்தைகள் சாட்சி சொல்ல இருக்க வைக்கப்படுகிற இடம் வெளிச்சம்கூட புகாத அளவுக்கு இறுக்கமாக நாய்க்கூண்டைப் ( dog kennels) போல் உள்ளது.  நாய்க்கூண்டிலாவது வெளிச்சம் உள்ளே வரக்கூடிய அளவுக்குக் கம்பிகள் உள்ளன. இங்கு குழந்தைகள் மூடிய இடத்துக்குள் இருக்க…

1 12 13 14 15 16 213