டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.
டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவர்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.