தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு உதவும் அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கு உதவ அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பிவைக்க ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழக மக்களால் வழங்கப்படும் இந்த உதவிகள், பாகுபாடு இன்றி இலங்கை நாட்டிற்கு அளிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட,…









