கேதார்நாத்: `201 யாத்ரீகர்கள் இறப்பு, ஹெலி-ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி’ – உத்தரகாண்ட் அரசு | Over 200 people have died so far during the ongoing Char Dham Yatra in Uttarakhand
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை அக்டோபர் மாத இறுதியில் முடிவடைய உள்ளது.இதுவரை யாத்திரை சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 2,50,000-தை தாண்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக கேதார்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் மற்றும் பனி சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது அங்குக் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. எனவே அப்பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை…









