17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கினார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறத் தொடங்கியது.
13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரக அணி, 57 ரன்னில் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆசிய கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகத் தனது சிறப்பான ஆட்டத்தால் மிரட்டியிருக்கிறார்.
குல்தீப் யாதவ்-ன் ஆட்டம்:
ஐக்கிய அரபு அமீரக அணி 47/2 என்ற நிலையில் இருந்தபோது, குல்தீப் யாதவ் பந்துவீச வந்தார். தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே, ராகுல் சோப்ராவை வீழ்த்தினார். அடுத்தடுத்து முகமது வசீம், ஹர்சித் கௌசிக் என மொத்தமாக 2.1 ஓவர்களில் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.