ASER அறிக்கை: தமிழக கிராம பள்ளி மாணவர்களின் வாசிப்பு, அடிப்படை கணிதம் எப்படி இருக்கிறது?

Share

 ASER அறிக்கையை கல்வியாளர்கள் எப்படி பார்க்கின்றனர்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.

பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் ஜனவரி 28 அன்று வெளியானது.

இதில், இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி தொடர்பான பல தரவுகள் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களிடையே, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறன் எந்த அளவில் உள்ளது என்ற தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தரவுகள், மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத்தில் இடைவெளி இருப்பதைக் காட்டுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com