இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கு ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற இப்பரப்புரை திட்டம், ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும். ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், ஒவ்வொரு நோயாளியும் முக்கியமான தரவாக கருதப்படுவதற்கு இந்த அறிவிக்கை உதவும். இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை என்ற இலக்கை நோக்கியப் பயணத்தில் எந்த தரவும் தவறவிடப்படாமல் இருப்பதை இந்த அறிவிக்கை உறுதிசெய்யும்.
ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உட்பட, 15 மாநிலங்கள், அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது. உலகளவில் யுஎஸ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க், நோர்டிக் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல் கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் காம்பியா உட்பட, 12-க்கும் கூடுதலான நாடுகள் புற்றுநோய் நேர்வு குறித்த தகவலை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை அங்கீகரித்திருக்கின்றன.