நமது உடல் ஆரோக்கியத்திற்கு, சத்துகள் நிரம்பிய உணவுகள் இன்றியமையாதவை. அதேநேரம் உணவுப் பொருள்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கலாம். குறிப்பாக, இறைச்சி போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்தால், அந்த உணவுகளே நமக்கு நச்சுகளாக மாறி உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் நமது சமையல் முறையும் இன்று பெருமளவில் மாறிவிட்டது. விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த இல்லங்களை, இன்று மின்சார அடுப்புகள், மைக்ரோவேவ், ஏர்ஃப்ரையர்கள், எலக்ட்ரிக் குக்கர்கள் அலங்கரிக்கின்றன. மின்சார உபகரணங்கள், சமைக்கும் பணியை எளிமையாக்கி விட்டாலும், அவற்றால் சில பாதகங்களும் உள்ளன.
இந்த மின்சார சாதனங்கள் நமக்கு ஏற்படுத்தும் சில தீங்குகள் பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) சமீபத்திய ஆய்வில், அடுப்பு அல்லாத பிற சாதனங்களில் சமைத்த, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்டவர்களில் பலருக்கு நச்சுத்தன்மையால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
“இது தொடர்பாக, இன்டர்நெட் பேனல் சர்வேயில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், பதப்படுத்தப் பட்ட சிக்கன் சமைக்க, அடுப்பைத் தவிர வேறு உபகரணங் களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்; 29% பேர் மைக்ரோவேவ் பயன்படுத்தினார்கள்” என்று ஆய்வு கூறுகிறது.