தீபத்திருவிழா : பாதுகாப்பு பணியில் 12,500 காவலர்கள்
தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் பலர் கிரிவலம் வருகின்றனர். இதையொட்டி கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, தாம்பரம், மதுரையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 12 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.