கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை, துப்பாக்கிச் சூடு சத்தம், கைதி மரணம் – என்ன நடந்தது?

Share

மஹர சிறைச்சாலை

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மஹர சிறைச்சாலைக்குள் இன்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக போலீசார், விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், ராகமை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறைச்சாலை கட்டடத் தொகுதியில் தீ பரவியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன், சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக சிறைச்சாலை வளாகத்தில் கூடியிருந்த கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com