பாலகுமாரன் வசனம் எழுதிய 8 முக்கிய படங்களும் பிரபல வசனங்களும் என்ன?

Share

பாலகுமாரன், வசனகர்த்தா

பட மூலாதாரம், Sri Markandeya Book Gallery

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“நீங்க நல்லவரா கெட்டவரா?”, “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி” என ஒற்றை வரியில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துக்காட்டும் வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முகங்கள் கொண்ட அவருக்கு இன்று (ஜூலை 5) பிறந்த நாள்.

நாயகன், ஜென்டில்மேன், குணா, பாட்ஷா எனப் பல திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருபெரும் நட்சத்திரங்களின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதிய பாலகுமாரன், 100க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். குறிப்பாக மெர்க்குரிப் பூக்கள், இரும்பு குதிரைகள் போன்ற நாவல்கள், உடையார், கங்கை கொண்ட சோழன் போன்ற வரலாற்று நாவல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

“பாலகுமாரனின் நாவல்களையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் எண்ணம்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி. ராம்ஜி.

பாலகுமாரன், வசனகர்த்தா, பத்திரிகையாளர் வி. ராம்ஜி

பட மூலாதாரம், V Ramji

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் வி. ராம்ஜி.

“தமிழ் சினிமாவின் வசனப் போக்கை ‘நாயகன்’ படம் மாற்றியது. சொல்லப்போனால், நாயகன் படத்துக்குப் பின் மணிரத்னத்தின் மற்ற படங்களிலும் வசனங்களின் போக்கையே மாற்றியது. அதிக வசனங்கள் இல்லாமல் மணிரத்னத்தின் படங்கள் அமைந்தன. பாலகுமாரனின் வசனங்கள் சராசரியாக பேசிக்கொள்வதை கவிதைத் தன்மையுடன் கூறுபவையாக இருக்கும்.” என்கிறார் அவர்.

சினிமா, இலக்கியம் குறித்து பல ஆண்டுகளாக எழுதிவரும் இவர், முகவரி, உல்லாசம் போன்ற படங்களுக்கு பாலகுமாரன் வசனம் எழுதியபோது அவருடன் இணைந்து பயணித்தவர். அவருடைய சில முக்கியமான படங்கள், அதில் வரும் வசனங்கள் குறித்து ராம்ஜி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இந்த கட்டுரையில் தொகுத்து தரப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com