குஜராத்தில் 50,000 ரூபாய்க்கு மனைவியை நண்பர்களுக்கு ‘விற்ற’ கணவர் சிக்கியது எப்படி?

Share

Gujarat, Sexual Harrassment, Husband, Wife, Police Compliant, Police Station, Criminals.

பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC

படக்குறிப்பு, கைது செய்யப்பட்டவர்கள்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குறிப்பு: இந்த செய்தியில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.

“பாலன்பூரில் 50,000 ரூபாய்க்காகத் தனது மனைவியைத் நண்பர்களுக்கு கணவன் விற்றுள்ளார். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.” என்று மேற்கு பாலன்பூர் காவல் துறையினர் மே 26 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரில் நடந்த இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட கணவன், தனது மனைவி காணவில்லை என்று கடந்த மே 11-ஆம் தேதி மேற்கு பாலன்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவல் துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், வெறும் இரண்டு நாட்களுக்குள் கிழக்கு பாலன்பூர் காவல் நிலையத்திலும் தனது மனைவி காணவில்லை என்று மற்றொரு புகாரை கணவன் பதிவு செய்தார்.

ஒரே விஷயத்திற்காக இரண்டு வெவ்வேறு காவல் நிலையங்களில் அவர் புகார் அளித்ததால் காவல் துறையினருக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com