நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

Share

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வாயு வெளியேற்றம் என்பது மிகவும் பொதுவான, ஆனால் மிகக் குறைவாகவே விவாதிக்கப்படும் உடல் செயல்பாடுகளில் ஒன்று.

அனைவருமே வாயுவை வெளியேற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஒரு நாளில் பல முறை, சில ஆய்வுகளின்படி எட்டு முதல் 25 முறை வரை, வாயு வெளியேற்றுகிறார்கள்.

அவை பெரும்பான்மை நேரங்களில் பிறரால் கவனிக்கப்படாமலே நிகழும். ஆனால், சில தருணங்களில் சுற்றி இருப்போரை அசௌகரியப்படுத்தும் வகையில் சத்தமாகவோ அல்லது துர்நாற்றத்துடனோ வாயு வெளியேறக்கூடும்.

சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?

குடல் வாயு வெளியேற்றம் என்பது என்ன?

மருத்துவ ரீதியாக, ஃப்ளாட்டுலன்ஸ் அல்லது ஃப்ளாட்டஸ் என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறையில், செரிமான அமைப்பில் இருந்து மலக்குடல் வழியாக வாயு வெளியேற்றப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com