“தகுதிநீக்கம் தொடங்கி பொதுக்குழு வரை” – அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

Share

அதிமுக, எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி

பட மூலாதாரம், X/EPS Tamil Nadu

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை, கட்சி நிர்வாகம் என்கிற இரு வேறு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பும் தனியாக ஆலோசனை நடத்தினர். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் கோரிய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் அடங்கிய தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரி வருகிறது.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தன்னை கொறடாவாக நியமித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய சி.விஜயபாஸ்கர், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை எதிர்த்து வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுபுறம் கட்சி பொதுக் குழுவை கூட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com