“தாடி, தொப்பியுடன் இருந்தால் குறிவைக்கிறார்கள்” – மதராஸாவுக்கு சென்ற இந்த 163 சிறுவர்கள் தடுக்கப்பட்டது ஏன்?

Share

பிஹாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராஷ்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.

பட மூலாதாரம், BBC/Shahnawaz

படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும், பிஹாரின் சீமாஞ்சல் பகுதியிலிருந்து ஏராளமான குழந்தைகள் மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களில் படிக்கச் செல்கின்றனர்.

    • எழுதியவர், சிது திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த மாதம் 11-ஆம் தேதி, பிஹாரைச் சேர்ந்த 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னி ரயில் நிலையத்தில் பாட்னா-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரயில்வே போலீசாரால் ‘வலுக்கட்டாயமாக’ இறக்கிவிடப்பட்டனர்.

ஆள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் இந்த 163 குழந்தைகள் மற்றும் 8 ஆசிரியர்களை புலின் ரயிலில் இருந்து இறக்கி விட்டார்.

பிஹாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராஷ்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.

இந்தக் குழந்தைகள் போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, தற்போது இந்தக் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தக் குழந்தைகள் இறக்கிவிடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய, பிபிசி நியூஸ் இந்தி குழுவினர் பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொள்ள முயன்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com