RCB VS MI: “எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!”- ஹர்திக் பாண்டியா வேதனை| Haedhik pandya post match speech

Share

உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பல விஷயங்களை நாங்கள் மறுபரிசீலணை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் முறைகள் வேலை செய்யவில்லை. சில போட்டிகளில் நாங்கள் டாஸ் வென்றும் கூட, பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டோம்.

மைதானத்தின் தன்மையைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். குறிப்பாக, பவர் பிளே-வில் நாங்கள் தடுமாறுகிறோம்.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பவர் பிளே-வில் பின்னடைவைச் சந்தித்துவிட்டு, பிறகு மீண்டு வரப் போராடுகிறோம். அடுத்த போட்டியில் என்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

இருப்பினும், ரூதர்ஃபோர்ட் ஆடிய விதம் எங்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது. அவரிடம் இருக்கும் திறமையும், சக்தியும் எங்களுக்குத் தெரியும். அவர் ஆடிய விதம் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அணியில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அவர் போன்ற வீரர்கள் இருப்பது எங்களுக்குப் பெரிய பலம்,” என்று ஹர்திக் பாண்டியா எதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com