சரப்ஜித் கவுர்: இஸ்லாம் மதத்திற்கு மாறி பாகிஸ்தான் நபரை திருமணம் செய்த இந்திய பெண் தற்போது எப்படி உள்ளார்?

Share

சரப்ஜித் கவுர் தனது வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷாவுடன்
படக்குறிப்பு, சரப்ஜித் கவுர் தனது வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷாவுடன்

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த சரப்ஜித் கவுர், ஷேகுபுராவில் உள்ள தனது கணவரின் வீட்டை அடைந்துள்ளார்.

சரப்ஜித் கவுரின் (நூர் பாத்திமா) வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா மற்றும் அவரது கணவர் நசீர் ஹுசைன் ஆகியோர், சரப்ஜித் கவுரை வீட்டுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாகவும், அதைத் தொடர்ந்து நேற்று இரவு லாகூரில் உள்ள பெண்கள் தங்குமிடத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பிபிசிக்கு கிடைத்துள்ள எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியத்தின் (Evacuee Trust Property Board) அறிவிப்பின்படி, ‘சரப்ஜித் கவுரை அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்த முடியாது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரப்ஜித் கவுர் நவம்பர் 4 ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்களுடன் பாகிஸ்தானுக்கு வந்தார், மேலும் அவரது விசா நவம்பர் 13 ஆம் தேதி காலாவதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் இந்தியா திரும்பவில்லை, இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு, மத்திய பஞ்சாபில் உள்ள ஷேகுபுராவில் வசிக்கும் நசீர் உசேன் என்பவரை மணந்தார்.

இதற்குப் பிறகு, சரப்ஜித் கவுர் பாகிஸ்தானில் தங்கி இஸ்லாம் மதத்திற்கு மாறினார், அதன் பிறகு அவரது பெயர் நூர் பாத்திமா என மாற்றப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com