காதலர் தினத்தை முன்னிட்டு “உயிருள்ளவரை உஷா’, ‘மௌனம் பேசியதே’, ‘மின்னலே’, ‘காதலர் தினம்’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலர் தினம்’ 90ஸ் கிட்ஸுக்கு அத்தனை பேவரிட் என்றே சொல்லலாம்.
பலருக்கும் பேவரிட்டான இத்திரைப்படம் இந்த வாரம் ‘காதலர் தினம்’ ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.
இத்திரைப்படத்திற்கு இயக்குநர் கதிர் ஏன் காதலர் தினம் என்கிற டைட்டில் வைத்தார் தெரியுமா?
1999-ல், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இதே கேள்விக்கு இயக்குநர் கதிர் பதிலளித்திருப்பார்.
அவர், “‘டீச்சர்ஸ் டே, மதர்ஸ் டே, இன்டிபெண்டன்ஸ் டே’னு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு நாள் இருக்கும். ஆனா, எல்லாவற்றையும்விட உயர்ந்தது ‘காதலர் தினம்’னு சொல்வேன்.
ஏன்னா… காதல்தான் மனிதகுலத்தையே நாகரிகப்படுத்தின விஷயம். ஆதி மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. அவன் எல்லோரோடும் வாழ்ந்தான்.