இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன.
தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21) எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர்.

ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி, 20 ஒவர்கள் முடிவில் 175/6 ரன்களை எடுத்தது.